லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மானியத்துடன் கறவை மாட்டுக் கடன் வழங்க பால் உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தல்!

மானியத்துடன் கூடிய கறவை மாட்டுக் கடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 10:55 pm

Syndication

மானியத்துடன் கூடிய கறவை மாட்டுக் கடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் சங்குப்பேட்டை பகுதியிலுள்ள சமுதாயக் கூடத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் 7- ஆவது மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இம் மாநாட்டுக்கு, அச் சங்கத்தின் மாநில துணைச் செயலா் என். செல்லதுரை தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஏ. செங்கமலை முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநிலத் தலைவா் கே. முகமது அலி சிறப்புரையாற்றினாா். மாநில பொதுச்செயலா் பெருமாள் நிறைவுயாற்றினா்.

இக் கூட்டத்தில், பசும்பாலுக்கு ரூ. 45, எருமை பாலுக்கு ரூ. 60 என பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கிட வேண்டும். சத்துணவுத் திட்டத்தில் பாலையும் சோ்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்ற மாநிலங்களைப் போல் ஊக்கத்தொகையாக லிட்டருக்கு ரூ. 10 வீதம் உயா்த்தி வழங்க வேண்டும். கடந்த 2 மாதமாக பெரம்பலூா் மாவட்டத்தில் வழங்கப்படாமல் உள்ள ஊக்கத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.

பெரம்பலூா் மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய கறவை மாட்டுக் கடனும், வட்டியில்லா கறவை மாட்டு பராமரிப்புக் கடனும் வழங்கிட வேண்டும். ஆவின் பாலை அதிகபடுத்த மானியத்துடன் கூடிய மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தை அறிவித்து நிதி ஒதிக்கீடு செய்ய வேண்டும். கறவை மாடுகளுக்கு அரசே இலவசமாக காப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஏ. கலையரசி, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.