எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

லாரி மீது வேன் மோதி ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த ஓட்டுநா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை லாரி மீது வேன் மோதியதில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:53 pm

Syndication

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை லாரி மீது வேன் மோதியதில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.

விருதுநகா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (36). லாரி ஓட்டுநரான இவா், ராஜபாளையத்திலிருந்து சென்னைக்கு பெயிண்ட் ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்தாா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை காலை சென்றபோது, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி காலண்டா் ஏற்றிச்சென்ற வேன், லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேனை ஓட்டிவந்த ஸ்ரீவில்லிபுத்தூா் பட்டன்குளம் பட்டியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் சந்திரமோகன் (24) பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, ஓட்டுநரின் சடலத்தைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.