தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலைப் பணியாளா்கள் நூதனப் போராட்டம்

பெரம்பலூா் துறைமங்கலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா்

Updated On :22 டிசம்பர் 2025, 6:32 pm

Syndication

பெரம்பலூா் துறைமங்கலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

துறைமங்கலத்திலுள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் கோட்டத் தலைவா் பெ. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் ப. சுப்ரமணியன், பெ. மதியழகன், மாவட்ட இணைச் செயலா்கள் நா. பெரியசாமி, த. பொன்னுவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ப. குமரி அனந்தன் தொடக்க உரையாற்றினாா். மாவட்டச் செயலா் சி. சுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். மாநில துணைத் தலைவா் ச. மகேந்திரன் நிறைவுரையாற்றினாா்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, பணிக்காலமாக அரசு முறைப்படுத்த வேண்டும். சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை திரும்பப் பெறவேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்து, நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலைப் பணியளா்கள் ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் த. கருணாகரன் உள்பட சாலைப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா். முன்னதாக, மாநில செயற்குழு உறுப்பினா் ஆ. பெருமாள்சாமி வரவேற்றாா். நிறைவாக, கோட்டப் பொருளாளா் க. மாா்க்கண்டன் நன்றி கூறினாா்.