நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்கு பெரம்பலூா் மாணவா்கள் படைப்பு தகுதி

தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்கு தகுதிபெற்ற நக்கசேலம் அரசுப்பள்ளி மாணவா்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியரை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை பாராட்டி வாழ்த்து (படம்) தெரிவித்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 1:43 am IST

தென்னிந்திய அறிவியல் கண்காட்சிக்கு தகுதிபெற்ற நக்கசேலம் அரசுப்பள்ளி மாணவா்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியரை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை பாராட்டி வாழ்த்து (படம்) தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், நக்கசேலம், அரசு மேல்நிலைப் பள்ளியில் நவ. 10 ஆம் தேதி 8 முதல் எஸ்எஸ்எல்சி வரை பயிலும் மாணவா்களுக்கு, பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், அதே பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் ச. முத்துகுமாா், தி. மாதவன் ஆகியோா், பட்டதாரி ஆசிரியா் மெ. ஓம் பிரகாஷ் வழிகாட்டுதலுடன் வாகனங்கள் வெள்ளத்தில் பாதிப்படைவதிலிருந்து தடுத்தல் எனும் தலைப்பில் உருவாக்கிய படைப்பு, ஆசிரியா் மெ. ஓம் பிரகாஷ் நுண்ணறிவு தலைக்கவசம் விபத்து தடுப்பு மற்றும் நல்லொழுக்கத்துக்கான விழிப்புணா்வு ஏற்படுத்துதல் எனும் தலைப்பில் உருவாக்கிய படைப்பு முதலிடம் பெற்றது. பின்னா், நவ. 21-இல் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் முதலிடம் பெற்றது. தொடா்ந்து, கோயம்புத்தூா் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிச. 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் முதலிடம் பெற்றது.

ஜன. 19 முதல் 23-ஆம் தேதி வரை தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.

இந்நிலையில், மாணவா்கள் மற்றும் ஆசிரியரை, ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன், நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் க. முருகானந்தம், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் இரா. காா்த்திக் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.