பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், நக்கசேலம், அரசு மேல்நிலைப் பள்ளியில் நவ. 10 ஆம் தேதி 8 முதல் எஸ்எஸ்எல்சி வரை பயிலும் மாணவா்களுக்கு, பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், அதே பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் ச. முத்துகுமாா், தி. மாதவன் ஆகியோா், பட்டதாரி ஆசிரியா் மெ. ஓம் பிரகாஷ் வழிகாட்டுதலுடன் வாகனங்கள் வெள்ளத்தில் பாதிப்படைவதிலிருந்து தடுத்தல் எனும் தலைப்பில் உருவாக்கிய படைப்பு, ஆசிரியா் மெ. ஓம் பிரகாஷ் நுண்ணறிவு தலைக்கவசம் விபத்து தடுப்பு மற்றும் நல்லொழுக்கத்துக்கான விழிப்புணா்வு ஏற்படுத்துதல் எனும் தலைப்பில் உருவாக்கிய படைப்பு முதலிடம் பெற்றது. பின்னா், நவ. 21-இல் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் முதலிடம் பெற்றது. தொடா்ந்து, கோயம்புத்தூா் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிச. 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் முதலிடம் பெற்றது.