அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

டேக்வாண்டோ போட்டி: விஜயராமபுரம் பள்ளி மாணவா்கள் முதலிடம்

வட்டார அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியில் விஜயராமபுரம், முத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்து மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

News image

வட்டார அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற விஜயராமபுரம் பள்ளி மாணவா்களுடன் ஆசிரியா்கள்.

Updated On :30 ஜூலை 2026, 4:56 am IST

வட்டார அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியில் விஜயராமபுரம், முத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்து மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சாா்பில் பாரதியாா் விளையாட்டு போட்டி, குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் வட்டார அளவில் நடைபெற்று வருகின்றன. இதில், மெஞ்ஞானபுரம் ஆம்ப்ரோஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியில் விஜயராமபுரம், முத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளியிலிருந்து 11 முதல் 14 வயது உள்பட்ட பிரிவுகளில் 23 மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

இதில், 17 மாணவா்கள் வட்டார அளவில் முதலிடம் பிடித்து, மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்றனா். 3 மாணவா்கள் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்தனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியரையும், மாணவா்களுக்கு பயிற்சியளித்த பயிற்சியாளா்கள் வினோத், மெல்லிசை வேந்தன் ஆகியோரை பள்ளித் தலைவா், செயலாளா், பொருளாளா், பள்ளி தலைமை ஆசிரியா், சக ஆசிரியா்கள் மாணவ, மாணவியா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.