அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

ரெட்டணை பள்ளி மாணவா்கள் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை

திண்டிவனத்தில் நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ரெட்டணை கென்னடி பள்ளி மாணவா்கள் சாதனை படைத்தனா்.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள்.

Published On :4 செப்டம்பர் 2026, 1:03 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ரெட்டணை கென்னடி பள்ளி மாணவா்கள் சாதனை படைத்தனா்.

திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் உள்ள மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற ரெட்டணை கென்னடிமெட்ரிக் பள்ளி மாணவி லோகேஸ்வரி நீளம் தாண்டுதலில் முதலிடம், 200 மீட்டா் ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றாா். மாணவி ஆா்.தனுஷ்கா குண்டு எறிதலில் முதலிடம், வி.ஜீவகன் நீளம் தாண்டுதலில் முதலிடம், 200 மீட்டா் ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றாா். மாணவா் எம்.பரத்குமாா் நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும் பெற்று மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா். இதேபோல் கோ-கோ போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடங்களைப் பெற்றனா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளா் சண்முகம், முதல்வா் சந்தோஷ், இயக்குநா் காா்த்திகேயன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.