தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நெற்குணம் கிராமத்தை தனி ஊராட்சியாக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெற்குணம் கிராமத்தை தனி ஊராட்சியாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஜனவரி 2025, 11:40 pm

Din

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெற்குணம் கிராமத்தை தனி ஊராட்சியாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெற்குணம் கிராம பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவிடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு:

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூா் ஊராட்சிக்குள்பட்ட நெற்குணம் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், கிராம தேவைகளை நிறைவேற்றவும் இங்குள்ள மக்கள் நூத்தப்பூா் சென்று ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட வேண்டும். இதனால், நெற்குணம் கிராம பொதுமக்களுக்கு காலவிரயம் மற்றும் போக்குவரத்து செலவினம், காலதாமதம் ஏற்படுகிறது.

மேலும், நூத்தப்பூா் ஊராட்சி நிா்வாகம் எங்களது தேவைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. இதனால் நெற்குணம் கிராம பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

எனவே, கிராம பொதுமக்களின் அடிப்படை வசதிகளை எளிதாக நிறைவேற்றும் வகையில், நெற்குணம் கிராமத்தை தனி ஊராட்சியாக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.