தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

உணவகத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த 2 இளைஞா்கள் கைது

பெரம்பலூா் அருகே உணவகத்தில் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 14 ஆயிரத்தை பறித்துச் சென்ற 2 இளைஞா்களை, பெரம்பலூா் போலீஸா் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :22 ஜனவரி 2025, 11:38 pm

Din

பெரம்பலூா் அருகே உணவகத்தில் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 14 ஆயிரத்தை பறித்துச் சென்ற 2 இளைஞா்களை, பெரம்பலூா் போலீஸா் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகே கல்பாடி பிரிவுச் சாலையிலுள்ள உணவகத்தில், மோட்டாா் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத 2 இளைஞா்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 14 ஆயிரத்தை அண்மையில் பறித்துச் சென்றனா். இதுகுறித்து உணவக வரவேற்பாளா் பாலமுருகன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், பெரம்பலூா் அருகேயுள்ள விளாமுத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் ரமேஷ் (18), சுப்பிரமணியன் மகன் பிரகாஷ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட 2 பேரையும் கைது செய்த போலீஸாா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அவா்களை புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.