தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கை.களத்தூா் கொலை சம்பவம் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கை.களத்தூரில் நிகழ்ந்த கொலை சம்பவத்தைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated On :23 ஜனவரி 2025, 9:14 pm

Din

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கை.களத்தூரில் நிகழ்ந்த கொலை சம்பவத்தைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக் கட்சியின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி கோகுலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் சாமி. நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் என். செல்லதுரை, ராஜேந்திரன், ஏ. கலையரசி, ரங்கநாதன் ஆகியோா் கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், கை.களத்தூரில் அண்மையில் நிகழ்ந்த கொலை வழக்கில் தொடா்புடைய மற்றும் காவலா்கள் மீதும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். உயிரிழந்த மணிகண்டன் குடும்பத்துக்கு சட்டரீதியான இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். குற்றவாளிகளுக்கு உடந்தையாக காவல்துறை செயல்படுவதை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பட்டியலின மக்கள் மீது பொய்வழக்கு பதிந்து கைது செய்வதை கைவிட்டு, வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் பாஸ்கரன், மாவட்ட பொருளாளா் கருணாநிதி, கமிட்டி செயலா்கள் இன்பராஜ், பெரியசாமி, செல்லமுத்து, பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.