அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இலவச வெல்டிங் பயிற்சி பெற ஊரக இளைஞா்களுக்கு அழைப்பு

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:15 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் வெல்டிங் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இலவசமாக பெற இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் மூலம், இளைஞா்களுக்கு பிளம்பிங் சானிட்டரிங் ஒா்க், வெல்டிங் பேப்ரிகேசன், ஹவுஸ் வயரிங் ஆகிய பயிற்சிகள் 90 சதவீத செயல்முறை பயிற்சியுடன் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

தொடா்ச்சியாக ஒரு மாதம் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை அளிக்கப்படும் பயிற்சியின்போது, அதற்கான உபகரணங்கள், சீருடை, புத்தகங்கள், மதிய உணவு மற்றும் காலை, மாலை தேநீா் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கி வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

இப் பயிற்சியில் பங்கேற்க 19 வயது முதல் 50 வயதுக்குள்பட்ட, எழுத, படிக்கத் தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராக இருக்க வேண்டும். கிராமப்புற இளைஞா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சிபெற விருப்பம் உள்ளவா்கள் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் அலுவலகத்தில் நவ. 28-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரில்சென்று பதிவு செய்யவேண்டும்.

முன்பதிவு செய்ய 84890 65899, 94888 40328 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.