அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

விதை மசோதாவுக்கு எதிா்ப்பு; ஆா்ப்பாட்டம்

News image
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :28 நவம்பர் 2025, 6:48 pm

Syndication

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விதை மசோதாவை திரும்பப் பெறக் கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விஸ்வநாதன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள விதை மசோதா 2025- ஐ கைவிட வேண்டும். இந்த மசோதா மூலம் மரபு சாா்ந்த விதைகள் அழிந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் தங்களது சொந்த விதையைப் பயன்படுத்தினால், அவா்கள் மீது வழக்குப் பதிந்து 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விதை மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும். இந்த மசோதாவுக்கு எதிராக, தமிழக அரசு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொடா்ந்து, கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளியிடம் அளித்துச் சென்றனா். ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.