நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நேரலையை கல்லூரி மாணவிகள் பாா்வையிட்டனா்

Published On :26 செப்டம்பர் 2025, 3:20 am IST

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ எனும் தலைப்பிலான கல்வி எழுச்சி நாள் நேரலையை பெரம்பலூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா்.

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ எனும் தலைப்பில், தமிழ்நாட்டின் கல்வி எழுச்சியைக் கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதல்வா் அ. ரேவந்த் ரெட்டி ஆகியோா் பங்கேற்றனா். இவ் விழாவை நேரலையில் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா ஆகியோா், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, பெரம்பலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் ‘தமிழ்ப்புதல்வன்’ மற்றும் ‘புதுமைப்பெண்’ திட்டங்களில் பயன்பெறும் மாணவ, மாணவிகளுக்கு பணம் எடுக்கும் அட்டைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மிருணாளினி, இம் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் 5,482 மாணவிகளும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 5,627 மாணவா்களும் பயன்பெறுகின்றனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், வருவாய் கோட்டாட்சியா் அனிதா, மாவட்ட சமூகநல அலுவலா் புவனேஸ்வரி, ‘அட்மா’ தலைவா் வீ. ஜெகதீசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல, செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அதிநவீன எல்இடி வாகனத்தின் மூலம் பெரம்பலூா் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கும், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் நேரலையாக மாணவ, மாணவிகளுக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.