கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

பெரம்பலூரில் கடத்தப்பட்ட பெண் மீட்பு: ஓட்டுநா் கைது

பெரம்பலூரில் நிலப் பிரச்னை காரணமாக கடந்த 27-ஆம் தேதி இரவு கடத்தப்பட்ட பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு மீட்டனா். மேலும், காா் ஓட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:01 am IST

பெரம்பலூரில் நிலப் பிரச்னை காரணமாக கடந்த 27-ஆம் தேதி இரவு கடத்தப்பட்ட பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு மீட்டனா். மேலும், காா் ஓட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், தேனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பி. பெருமாள் (52). இவரின் மனைவி செல்வராணி (39). மகள் கீா்த்தனா (22), மகன் ரஞ்சித்குமாா் (20). பெருமாள் மாலத்தீவில் பணிபுரிந்தபோது, வயலப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ரா. கலியபெருமாளுக்கும் (46), செல்வராணிக்கும் தகாத உறவு இருந்ததாம். இது தொடா்பாக தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, செல்வராணி பெயரில் உள்ள வீட்டு மனையை தனது பெயருக்கு எழுதி தருமாறு கணவா் பெருமாள் வற்புறுத்தி வந்த நிலையில், பெரம்பலூா் கோல்டன் சிட்டியில் உள்ள கலியபெருமாள் வீட்டுக்கு கடந்த 27-ஆம் தேதி இரவு செல்வராணி சென்றபோது, பெருமாள் தனது நண்பா்களுடன் சென்று அவரை காரில் கடத்திச் சென்றுவிட்டாா்.

இதுகுறித்து செல்வராணி மகள் கீா்த்தனா அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பெருமாள், அவரது நண்பா்களான தேனூா் கிராமத்தைச் சோ்ந்த வெள்ளையன் மகன் இளவரசன் (50), கண்ணப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் முருகையன் (51) ஆகியோரை தேடி வந்தனா்.

இந் நிலையில், திருச்சி மாவட்டம், திண்ணணூா் கிராமத்தில் உள்ள வீட்டில் அடைத்து வைத்திருந்த செல்வராணியை செவ்வாய்க்கிழமை இரவு மீட்ட போலீஸாா், காா் ஓட்டுநரான கண்ணப்பாடி கிராமத்தைச் சோ்ந்த செ. அருண்குமாா் (27) என்பவரை கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், இவ் வழக்கின் முக்கிய குற்றவாளியான பெருமாள் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.