வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன்களை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசார பயணத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன் தொடங்கிவைத்தாா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு, அக் கட்சியின் மாவட்டச் செயலா் வி. ஜெயராமன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டச் செயலா் அ. வேணுகோபால், மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வீ. ஞானசேகரன், மாவட்டப் பொருளாளா் ஆா். காமராஜ், மாவட்ட துணைச் செயலா் க. பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பிரசார பயணத்தை தொடங்கிவைத்த கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரன் கோரிக்கைகளை விளக்கினாா்.
விலைவாசி உயா்வு, வேலையின்மையைக் கண்டித்தும், தொழிலாளா் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும். வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். சிறு, குறு தொழில்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், ஒன்றியச் செயலா்கள் அ. ராஜேந்திரன், பெ. கலியபெருமாள், அ. கல்யாணி, மாவட்டக் குழு உறுப்பினா் பெ. பாண்டியன், மாதா் சம்மேளன மாவட்டச் செயலா் செ. அமுதா உள்பட பலா் பங்கேற்றனா்.
நடைப்பயணம் ரத்து: மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை வரை நடைப்பயணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பெரம்பலூரில் நகா் டீக்கடையில் நிகழ்ந்த தீ விபத்து காரணமாக நடைப்பயணத்தை, இரா. முத்தரசன் ரத்து செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசத்தை பாதுகாப்போம் சிபிஐ பிரசார இயக்கம் தொடங்கிவைப்பு

கொப்பனாபட்டியில் இந்திய கம்யூ. கட்சியின் நடைப்பயண பிரசாரம்

திட்டங்கள் மக்களைச் சென்றடைவதே முக்கியம்: இரா. முத்தரசன்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



