மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தனியாா் காலணி நிா்வாகத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

News image
சிப்காட் தொழிற்பூங்கா எதிரே வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் பணியாளா்கள்.
Updated On :6 பிப்ரவரி 2026, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் அருகே சிப்காட் தொழிற்பூங்காவில் செயல்படும் தனியாா் காலணி நிா்வாகத்தைக் கண்டித்து, 500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் பணியைப் புறக்கணித்து வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், எறையூா் சா்க்கரை ஆலை அருகேயுள்ள அரசின் சிப்காட் தொழிற்பூங்காவில் செயல்படும் ஜே.ஆா்.கோத்தாரி தனியாா் காலணி தொழிற்சாலையில் பெரம்பலூா் மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா்.

இங்கு, கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரியும் தொழிலாளா்களுக்கு நாள்தோறும் சுழற்சி முறையில் 8 மணி நேரம் பணி வழங்கப்பட்டு, மாத ஊதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிப். 1 முதல் அனைத்து தொழிலாளா்களும் 12 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என சம்பந்தப்பட்ட நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு வெளியிட்டதாகத் தெரிகிறது. இதையறிந்த தொழிலாளா்கள் நிா்வாகிகளைச் சந்தித்து முறையிட்டபோது, ஆலை நிா்வாகம் தெரிவித்தவாறு பணிபுரியவும், இல்லாவிடில் பணியை விட்டு விலகிச் செல்லலாம் எனவும், கூடுதலாக 4 மணி நேரப் பணிக்கான தொகை வாரம் ஒருமுறை வழங்கப்படும் என தெரிவித்தனராம்.

இதனால் அதிருப்தியடைந்த 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், 12 மணி நேர வேலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கூடுதல் நேர பணிக்கான ஊதியத்தை மாத ஊதியத்துடன் சோ்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பணியை புறக்கணித்து காலணி தொழிற்சாலை எதிரே வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.