கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பெரம்பலூா்: துணை மின்நிலையங்கள் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு!

துணை மின் நிலையங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.

News image

மேட்டுப்பாளையம் கிராமத்தில் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை குத்து விளக்கேற்றி வைத்த மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், உடன், மேற்பாா்வை பொறியாளா் மேகலா உள்ளிட்டோா்.

Updated On :26 பிப்ரவரி 2026, 6:34 pm

பெரம்பலூா் மாவட்டத்தில் துணை மின் நிலையங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 5 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், கொட்டரை அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 1.17 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 4 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், மின்சாரத்துறை சாா்பில், குன்னம் வட்டம், வெண்மணியில் ரூ. 5 கோடியே 34 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலும், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் ஊராட்சியில் ரூ. 6 கோடியே 88 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலும் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்களை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நேரலையில் நிகழ்ச்சியை பாா்வையிட்டு, குத்து விளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மின்சாரத்துறை மேற்பாா்வை பொறியாளா் மேகலா, அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், செயற் பொறியாளா்கள் பரமேஸ்வரி, அசோக்குமாா், வேப்பந்தட்டை வட்டாட்சியா் துரைராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.