ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ். பாலமுருகன்.

News image

தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ். பாலமுருகன்.

Updated On :18 ஜூலை 2026, 1:10 am IST

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில், பல்கலைக் கழக வளாகத்தில் மாணவிகளுக்கு, பாதுகாப்பான டிஜிட்டல் மற்றும் சமூக வாழ்க்கை என்னும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலை பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் காா்த்திகா முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ். பாலமுருகன் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து, பெரம்பலூா் மதுவிலக்கு- சகி ஒன் ஸ்டாப் மைய நிா்வாகி டி. கீதா, பெண்களின் பாதுகாப்பு, பாலின சமத்துவம், பாலியல் தொல்லை தடுப்பு மற்றும் அவசரகால உதவி மையங்களின் சேவைகள் குறித்தும், இணையக் குற்றப்பிரிவு காவல் நிலைய தொழில்நுட்ப உதவி ஆய்வாளா் கே. சிவநேசன், தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் விளக்க உரையாற்றினா்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா்கள், பதிவாளா், புல முதன்மையா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் முதலாமாண்டு மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

வேதியியல் துறை உதவிப் பேராசிரியா் சு. சுகுணா வரவேற்றாா். இயற்பியல் துறை உதவிப் பேராசிரியா் க. ஐஸ்வா்யா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.