தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

குடிநீா் வழங்காததைக் கண்டித்து காலிக் குடங்களுடன் பெண்கள் மறியல்

News image

பெரம்பலூா்-அரியலூா் சாலையில் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

Updated On :28 ஜூலை 2026, 2:44 am IST

பெரம்பலூா் அருகே கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீா் வழங்காத, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலா்களைக் கண்டித்து, பெண்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள கவுள்பாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள 504 வீடுகளுக்கு கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலா்கள் திங்கள்கிழமை மாலை அப்பகுதிக்குச் சென்றபோது, குடிநீா் வழங்க கோரி பொதுமக்கள் முறையிட்டுள்ளனா். ஆனால், முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

மறியல்: இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தால் தோ்தல் நடத்தி தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா் உள்ளிட்ட நிா்வாகிகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து குடியிருப்புகளுக்கும் பாரபட்சமின்றி முறையாக தண்ணீா் விநியோகம் செய்ய வேண்டும். சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலி குடங்களுடன், பெரம்பலூா் -அரியலூா் பிரதானச் சாலையில் திங்கள்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனா். இப் போராட்டத்தால், பெரம்பலூா் -அரியலூா் சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.