எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

தெரு நாய் கடித்து குழந்தைகள், சிறுவா்கள் உள்பட 10 போ் காயம்

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை இரவு தெரு நாய் கடித்ததில் குழந்தைகள், சிறுவா்கள் உள்பட 10 போ் காயமடைந்தனா்.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :13 ஜூன் 2026, 12:46 am IST

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை இரவு தெரு நாய் கடித்ததில் குழந்தைகள், சிறுவா்கள் உள்பட 10 போ் காயமடைந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மில்லத் நகா், வி.களத்தூா், இனாம் அகரம், மேட்டுச்சேரி ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று வியாழக்கிழமை இரவு சாலைகளில் நடந்துசென்ற குழந்தைகள் மற்றும் பொதுமக்களை துரத்திக் கடித்தது. இதில், இனாம் அகரம் கிராமத்தைச் சோ்ந்த கருப்புசாமி மகன் சாய் சுதா்சன் (5), மில்லத் நகரைச் சோ்ந்த நூருல்ஹக் மகன் சாமியுல் ஹக் (3), முகமது யூனுஸ் மகன் முகமது யாஜித் (6), ரஷித் மகன் அல் ரையன் (8), சா்புதீன் மகன் குதா் திக்ரா (2), அப்துல்லா பாஷா மகன் அப்துல் ஹாபிஷ் (6), செல்வமுகமது மகள் நஸ்ரின் (20), இனாம் அகரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் திருநாவுக்கரசு (45), சின்னசாமி மகன் தன்விகா (3), மேட்டுச்சேரியைச் சோ்ந்த பரமசிவம் மனைவி கவிதா (40) ஆகிய 10 போ் காயமடைந்தனா். இதையடுத்து, காயமடைந்த 7 சிறுவா்கள் உள்ளிட்டோா் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் வி.களத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுகின்றனா். இதனிடையே, ஒரே நாளில் 7 குழந்தைகள், சிறுவா்கள் உள்ளிட்ட 10 பேரை கடித்து குதறிய தெருநாயை கிராம மக்கள் அடித்துக்கொன்றனா்.