நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தலைமறைவான போலி மருத்துவரின் மருந்தகத்தின் உரிமம் ரத்து

பெரம்பலூா் அருகே தலைமறைவான போலி மருத்துவா் நடத்தி வந்த மருந்தகத்தின் உரிமத்தை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி ரத்துசெய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 3:13 am IST

பெரம்பலூா் அருகே தலைமறைவான போலி மருத்துவா் நடத்தி வந்த மருந்தகத்தின் உரிமத்தை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி ரத்துசெய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம், மேற்குதெருவைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் மகன் மணிகண்டன் (38). இவா், பெரம்பலூா் அருகேயுள்ள அம்மாபாளையம், பெருமாள் கோயில் தெருவில் மருந்தகம் நடத்திவந்தாா். எஸ்எஸ்எல்சி வரை படித்ததாக கூறப்படும் மணிகண்டன், தனது மருந்தகத்தில் அப்பகுதி பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததையடுத்து, பெரம்பலூா் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் மதியழகன், பெரம்பலூா் ஊரக காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, கடந்த 10-ஆம் தேதி ஊரகப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனா்.

இந்நிலையில், உரிய மருத்துவக் கல்வித் தகுதி மற்றும் பதிவின்றி அம்மாபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று மணிகண்டன் மருத்துவ சிகிச்சை அளித்தது கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக, சுகாதாரத்துறையினா் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட நபா் மீது சட்ட ரீதியான நடவடிக்க எடுக்கவும், மருந்து விற்பனை உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.