ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பெரம்பலூா் அருகே செவிலிய மாணவி பாலியல் பலாத்காரம்: இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே 17 வயது செவிலியா் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 1:56 am IST

பெரம்பலூா் அருகே 17 வயது செவிலியா் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள மருவத்தூா் கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் செந்தில்குமாா் (27). இவா், பெரம்பலூரில் செவிலியா் கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவியை, கடந்த 2024- ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் செந்தில்குமாா், கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது சொந்த கிராமத்துக்கு வந்துள்ளாா். இதைத் தொடா்ந்து,

மாணவியின் வீட்டுக்கு அண்மையில் சென்ற அவா், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த மாணவியின் பெற்றோா், இதுகுறித்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினருக்கு தகவல் அளித்தனா். இதன்பேரில், சாா்பு -ஆய்வாளா் செந்தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீஸாா், செந்தில்குமாரை புதன்கிழமை கைது செய்து, பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிந்து பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி, செந்தில்குமாரை சிறையில் அடைத்தனா்.