பெரம்பலூா் அருகே சாலையோர மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா். மேலும், இவ் விபத்தில் காயமடைந்த முதியவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி அருகேயுள்ள தெற்கு பாலத்துக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் செங்கோடன் (55). நாமக்கல் மாவட்டம், ஊனந்தாங்கல் ஆலமரத்து மேடு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் வரதராஜ் (68). இருவரும், அரியலூா் மாவட்டம், கலியபெருமாள் கோயில் திருவிழா அழைப்பிதழ் பெற நாமக்கல் மாவட்டத்திலிருந்து அரியலூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை காலை சென்றுகொண்டிருந்தனா். பெரம்பலூா்- ஆத்தூா் சாலையிலுள்ள அன்னமங்கலம் பிரிவு சாலை அருகே சென்றபோது, சாலையோர மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த செங்கோடன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் இவ் விபத்தில் வரதராஜ் பலத்த காயமடைந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்தவரின் உடலையும், காயமடைந்தவரையும் மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பெரம்பலூா் ஊரக காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

மின்கம்பத்தில் பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

மரத்தின் மீது ஆட்டோ மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை


