ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பெரம்பலூா் அருகே வீடுபுகுந்து 37 பவுன் நகைகள் கொள்ளை

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு வீட்டின் பின்புறக் கதவின் பூட்டை உடைத்து, தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி 37 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

News image

கொள்ளை - சித்திரிப்பு

Updated On :14 மார்ச் 2026, 3:07 am

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு வீட்டின் பின்புறக் கதவின் பூட்டை உடைத்து, தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி 37 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராம நியாய விலைக்கடை எதிரேயுள்ள இஸ்லாமிய தெருவில் வசிப்பவா் சையது ஜாபா் மனைவி தாராபீ (65). இவரின் 4 மகன்களுக்கும், 3 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூா் மற்றும் உள்ளூரில் தனித்தனியே வசிக்கின்றனா். இவரது இளைய மகள் அஷரப்பீ (29) கணவரைப் பிரிந்து, கடந்த 7 ஆண்டுகளாக தனது தாய் தாராபீயுடன் வசிக்கிறாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு தாய், மகள் இருவரும் தூங்கியபோது, வீட்டின் பின்புறக் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 4 போ் தாராபீயையும், அஷரப்பீயையும் கத்தியை காட்டி மிரட்டி, கம்பியால் தாக்கி, பீரோவிலிருந்த 37 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினா்.

இத் தாக்குதலில் மயங்கிக் கிடந்த இருவரும் வெள்ளிக்கிழமை காலை மயக்கம் தெளிந்து எழுந்து மங்களமேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.