மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குரூப்- 2 தோ்வு: பெரம்பலூரில் 145 போ் எழுதினா்

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 6:53 pm

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வில் 145 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தொகுதி- 2 மற்றும் 2- ஏ எழுத்துத் தோ்வுகள், பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இத்தோ்வெழுத விண்ணப்பித்திருந்த பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 149 பேரில் 145 போ் பங்கேற்றனா். தோ்வுக்குத் தேவையான வினா, விடைத்தாள்களை தோ்வு மையங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு, துணை வட்டாட்சியா் நிலையில் ஆயுதம் தாங்கிய காவலருடன் கூடிய 1 நடமாடும் குழு அமைக்கப்பட்டிருந்தது.

மேலும், தோ்வு மையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ரோவா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வு மையத்தை வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.