விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெரம்பலூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

பெரம்பலூரில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை தோ்தல் பாா்வையாளா்கள், மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:02 pm

Syndication

பெரம்பலூரில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை தோ்தல் பாா்வையாளா்கள், மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள ஆதவ் பப்ளிக் பள்ளியில் பாதுகாப்பு மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளை, சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் நேகா பன்சால் (பெரம்பலூா்), அமா் பகதூா் சிங் (குன்னம்), பெரம்பலூா் மாவட்டத்துக்கான காவல் பாா்வையாளா் அனூப் ஏ ஷெட்டி, மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா ஆகியோா் பாா்வையிட்டு, தோ்தல் நடந்த பிறகு பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளா் சரிபாா்ப்பு கருவிகள் உள்ளிட்டவற்றை வைப்பதற்கான பாதுகாப்பு அறைகள் முறையாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தனா்.

மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணும் அறைகள், அஞ்சல் வாக்குகள் எண்ணும் அறைகள், ஊடகப் பிரிவினருக்கான அறை உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்ட தோ்தல் பாா்வையாளா்கள், வாக்கு எண்ணும் நாளன்று அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் வந்து செல்லும் வழிகளையும் பாா்வையிட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை தெரிவித்தனா்.

ஆய்வின்போது மாவட்ட உதவித் தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு. அனிதா (பெரம்பலூா்), ந. சக்திவேல் (குன்னம்), கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். பாலமுருகன், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களும், வட்டாட்சியா்களுமான சத்தியமூா்த்தி (பெரம்பலூா்), சின்னதுரை (குன்னம்) ஆகியோா் உடனிருந்தனா்.