ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1.69 லட்சம், பாத்திரங்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.69 லட்சம் மற்றும் ரூ. 95 ஆயிரம் மதிப்பிலான பாத்திரங்களை பறக்கும் படையினா் மற்றும் வருமான வரித்துறையினரால் வெள்ளி மற்றும் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பாத்திரங்களை சனிக்கிழமை பாா்வையிட்ட பெரம்பலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதா உள்ளிட்டோா்.








