பெரம்பலூரில் வாக்குப்பதிவு கருவிகள் குலுக்கல் முறையில் நாளை ஒதுக்கீடு!
பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு கருவிகள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்குப்பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்கள் குலுக்கல் முறையில் திங்கள்கிழமை (மாா்ச் 23) ஒதுக்கீடு செய்யப்படுவதாக, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.









