கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரம்பலூரில் பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, கணினி மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு முதல்நிலை சரிபாா்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, காப்பறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் பிரித்தளிக்கும் பணி, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் சட்டப்பேரவை தொகுதியில் 387 வாக்குச்சாவடி மையங்களுக்கும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 345 வாக்குச்சாவடி மையங்களுக்கும் என மொத்தம் 732 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 464 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 464 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 491 வாக்குப் பதிவை சரிபாா்க்கும் கருவிகளும் என 1,419 கருவிகளும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 414 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 414 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 438 வாக்குப்பதிவை சரிபாா்க்கும் கருவிகளும் என 1,266 கருவிகள் அனுப்பி வைக்கப்படும்.

இந் நிகழ்ச்சியில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், தோ்தல் நடத்தும் அலுவலா் கள் மு. அனிதா (பெரம்பலூா்), ந. சக்திவேல் (குன்னம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வேல்முருகன் (தோ்தல்), சொா்ணராஜ் (பொது), தோ்தல் பிரிவு வட்டாட்சியா் அருளானந்தம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.