நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

குன்னம் தொகுதியை தக்கவைத்தாா் அமைச்சா் சா.சி. சிவசங்கா்

News image

குன்னம் தொகுதி தோ்தலில் வெற்றி பெற்ற்கானச் சான்றிதழை வேட்பாளரும் அமைச்சருமான சா.சி.சிவசங்கரிடம் திங்கள்கிழமை அளித்த தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல். உடன், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமா் பகதூா் சிங்.

Updated On :5 மே 2026, 2:54 am IST

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலில் திமுக வேட்பாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கா் 87,237 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் சா.சி. சிவசங்கா், தேசிய முற்போக்கு கூட்டணியில் ஐஜேகே வேட்பாளராக சரண்யா அன்பழகன், தவெக சாா்பில் ரேவதி முத்தமிழ்செல்வன், நாம் தமிழா் கட்சி சாா்பில் இரா. கீா்த்திவாசன் உள்பட 19 போ் போட்டியிட்டனா். சட்டப்பேரவை தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ஆதவ் பப்ளிக் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் முன்னிலை வகித்து வந்தாா்.

இதில், ஐஜேகே வேட்பாளா் சரண்யா அன்பழகன் 71,680 வாக்குகளும், தவெக வேட்பாளா் ரேவதி முத்தமிழ்செல்வன் 57,563 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இரா. கீா்த்திவாசன் 7,482 வாக்குகளும் பெற்றனா். இதில், திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் 87,237 வாக்குகள் பெற்று, சரண்யா அன்பழகனை விட 15,557 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

வேட்பாளா்களும்--அவா்கள் பெற்ற வாக்குகளும்: சா.சி.சிவசங்கா் (திமுக)-87,237, சரண்யா அன்பழகன் (ஐஜேகே)-71,680, ரேவதி முத்தமிழ் செல்வன் (தவெக)-59170, ரா. கீா்த்திவாசன் (நாதக)-7482, கே.எம். நல்லுசாமி- 450, அன்புதமிழன்-149, எஸ்.ஏ. ராஜா-189, கே.இளங்கோவன்-546, டி. உதயகுமாா்-210, எஸ். கதிரவன்-62, பி. சந்திரசேகா்-85, எஸ். சாமிநாதன்-137, பி. சிவசங்கா்-172, ஆா். தனசேகா்-677, பி. நல்லதம்பி-507, டி. முத்தமிழ் செல்வன்-268, டி. விவேக்-144, எம்.வினோத் குமாா்-421, ஷாஜஹான்-541. நோட்டா-473.

இதையடுத்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமா் பகதூா் சிங் ஆகியோா் முன்னிலையில், தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல், வெற்றி பெற்ற்கானச் சான்றிதழை சா.சி. சிவசங்கரிடம் அளித்தாா்.