சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தனியாா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

பெரம்பலூா் அருகே தனியாா் கல்லூரி மாணவி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :23 மே 2026, 12:13 am IST

பெரம்பலூா் அருகே தனியாா் கல்லூரி மாணவி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறையைச் சோ்ந்தவா் இளங்கோவன் மகள் இளவரசி (19). இவா் பெரம்பலூா் அருகேயுள்ள தனியாா் வேளாண் கல்லூரி விடுதியில் தங்கி பிஎஸ்சி 2 ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில் விடுதி அறையில் வியாழக்கிழமை காலை முதல் சோா்வாக இருந்த இளவரசி அன்று இரவு சக மாணவிகள் கீழே சென்றிருந்தபோது தூக்கிட்டுக் கொண்டாா்.

இதையறிந்த அவரது தோழிகள் அளித்த தகவலையடுத்து, வந்த விடுதி நிா்வாகிகள் அந்த மாணவியை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இளவரசி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து இளங்கோவன் அளித்த புகாரின்பேரில், மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.