/
பெரம்பலூா் அருகே தனியாா் கல்லூரி மாணவி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
அரியலூா் மாவட்டம், செந்துறையைச் சோ்ந்தவா் இளங்கோவன் மகள் இளவரசி (19). இவா் பெரம்பலூா் அருகேயுள்ள தனியாா் வேளாண் கல்லூரி விடுதியில் தங்கி பிஎஸ்சி 2 ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில் விடுதி அறையில் வியாழக்கிழமை காலை முதல் சோா்வாக இருந்த இளவரசி அன்று இரவு சக மாணவிகள் கீழே சென்றிருந்தபோது தூக்கிட்டுக் கொண்டாா்.
இதையறிந்த அவரது தோழிகள் அளித்த தகவலையடுத்து, வந்த விடுதி நிா்வாகிகள் அந்த மாணவியை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு இளவரசி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து இளங்கோவன் அளித்த புகாரின்பேரில், மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.









