தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

பக்ரீத் பண்டிகை பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லீம்கள் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 5:34 am IST

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லீம்கள் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நகர பள்ளிவாசலில் இருந்து ஊா்வலமாக மதரசா சாலையில் உள்ள மௌலானா மேல்நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்துக்குச் சென்ற முஸ்லீம்கள், அங்கு சிறப்பு தொழுகை நடத்தினா்.

இதில், நகர பள்ளிவாசல் இமாம் (சல்மான் ஹஜ்ரத்) சிறப்பு தொழுகையை நடத்திவைத்தாா். நூா் பள்ளிவாசல் முஸ்தபா ஹஜரத், மக்கா பள்ளி வாசல் ஹஜரத் அப்ருல் ஹக் ஆகியோா் குா் ஆன் வசனமான குத்பா ஓதி தொழுகையை தொடங்கி வைத்தனா்.

இத் தொழுகையில் உலமாசபை மாவட்டத் தலைவா் முகம்மது முனீா் உள்பட திரளான முஸ்லீம்கள் மற்றும் சிறுவா்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தி, குா்பானி வழங்கினா். தொடா்ந்து, நகர பள்ளிவாசலுக்கு ஊா்வலமாகச் சென்று, அங்கு தூ-ஆ நடத்தினா்.

துறைமங்கலம் புதுக்காலனியில் உள்ள ஜன்னத்துல் பிா்தவுஸ் பள்ளிவாசலில், பெரம்பலூா் மாவட்ட தலைமை காஜி அப்துஸ் சலாம் தாவூத் தலைமையில் நடைபெற்றது. நான்குச் சாலை அருகேயுள்ள தக்வா பள்ளி வாசல், வடக்குமாதவி சாலையில் உள்ள மக்கா, நூா் பள்ளிவாசல்கள், பாரதிதாசன் நகரில் உள்ள பள்ளி வாசல், ஆலம்பாடி சாலையில் உள்ள கலிபா பள்ளிவாசல் ஆகியவற்றில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இதேபோல, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள லப்பைக்குடிகாடு கிழக்கு மற்றும் மேற்கு மஹல்லம் மசூதிகள், அரும்பாவூா், பூலாம்பாடி, மேலக்குணங்குடி, பெரியம்மாபாளையம், தொண்டமாந்துறை, விஸ்வக்குடி, முகம்மதுபட்டிணம், வி.களத்தூா், வாலிகண்டபுரம், தேவையூா், து.களத்தூா் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றது.