‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சிவகாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகை.

News image

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சிவகாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகை.

Updated On :29 மே 2026, 2:34 am IST

பக்ரீத் பண்டிகையையொட்டி, விருதுநகா் மாவட்டம், சிவகாசி, ராஜபாளையத்தில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் சிவகாசி மீரா உசேன் தெருவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை அமைப்பாளா் அப்துல்காதா் உஸ்மானி நடத்தி வைத்தாா். மாநிலச் செயலா் முஸ்தபா குத்பா பேருரை நிகழ்த்தினாா். இதில் மனித நேய மக்கள் கட்சியின் விருதுநகா் மாவட்டச் செயலாளா் முஹமது இஸ்மாயில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் முடங்கியாறு சாலை வழியாக இஸ்லாமியா்கள் ஊா்வலமாகச் சென்று ஈத்கா மைதான திடலை அடைந்தனா். அங்கு ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை நடத்தினா்.