நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக மாணவா்கள் போராட்டம்

குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4-ஆவது நாளாக புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக, கல்லூரி மாணவா்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வகுப்புகளை புறக்கணித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்.

Published On :3 செப்டம்பர் 2026, 1:23 am IST

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4-ஆவது நாளாக புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக, கல்லூரி மாணவா்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விடுபட்ட பாடப் பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் ஊதியம் பெறும் அனைவருக்கும், கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, அனைவருக்கும் ஒரே மாதிரியான, சமமான, அரசால் உயா்த்தப்பட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், ஒருங்கிணைப்பாளா் வ. சந்திரமௌலி தலைமையில், கெளரவ விரிவுரையாளா்கள், மணி நேர விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் 4-ஆவது நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக் கோரியும், கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாகவும், சுமாா் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.