நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

சிலிண்டா் வெடித்து நேரிட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்

பெரம்பலூரில் எரிவாயு உருளை வெடித்துச் சிதறிய சம்பவத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 5 பேரின் குடும்பத்தினருக்கு, நிவாரண உதவித் தொகைக்கான உத்தரவுக் கடிதத்தை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

பிரதிப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 12:52 am IST

பெரம்பலூரில் எரிவாயு உருளை வெடித்துச் சிதறிய சம்பவத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 5 பேரின் குடும்பத்தினருக்கு, நிவாரண உதவித் தொகைக்கான உத்தரவுக் கடிதத்தை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

பெரம்பலூா் நகர காவல்நிலையம் எதிரேயுள்ள தேநீரகத்தில் கடந்த 11-ஆம் தேதி எரிவாயு உருளை வெடித்துச் சிதறியதில் 16 போ் காயமடைந்தனா். இவா்கள் பெரம்பலூா், திருச்சியிலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களில் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வந்த 7 போ் உயிரிழந்தனா். எஞ்சிய நபா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் காமராஜ், மித்ரா, சக்திவேல், பழனிசாமி, சிவபிரகாசம் ஆகியோரின் குடும்பச் சூழ்நிலை மற்றும் மருத்துவச் சிகிச்சையைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து தலா ரூ. 50 ஆயிரம் வீதம், ரூ. 2.50 லட்சம் நிவாரண உதவித் தொகைக்கான உத்தரவுக் கடிதங்களை, பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வட்டாட்சியா் பழனிசெல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.