புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குடி அருகேயுள்ள குலமங்களம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரராசு மகன் கருப்பையா(14). அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்றுவந்த இவருக்கு, கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
காய்ச்சலின் தீவிரம் குறையாததால், மேல்சிகிச்சைக்காக நவம்பர் 9 ஆம் தேதி தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த கருப்பையா வியாழக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.