விராலிமலை அருகே புதன்கிழமை நேரிட்ட சாலைவிபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
விராலிமலை அருகேயுள்ள வெள்ளக்கல்பட்டியைச் சேர்ந்த ஆ. தங்கராஜ்(50). கூலித்தொழிலாளியான இவர், கடந்த புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் கொடும்பாளூர் - மணப்பாறை பிரிவு சாலையைக் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது மதுரையிலிருந்து திருச்சி சென்ற கார், இருசக்கரவாகனம் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த தங்கராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீஸார் வழக்கு பதிந்து கார் ஓட்டுநர் மதுரையைச் சேர்ந்த வி. அச்சுநாராயணனை(25) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.