காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்தி மத்திய அரசுக்கு அனுப்பப்படுமென தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு மாவட்டத் தலைவர் கூகூர் சண்முகம் தலைமை வகித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் திரளானோர் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர். இதில், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு என்ன அதிகாரம் இருக்கு? - கனிமொழி கேள்வி | DMK | TVK

Ravindran Duraisamy Interview | அண்ணாமலை முடிவெடுக்க விஜய்தான் காரணம் | CM Vijay | TVK | Annamalai |

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடியது நம்பிக்கையளித்தது: ரிச்சா கோஷ்






