பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

தொழுநோயாளிகளுக்கான ஊன தடுப்பு முகாம்

காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

Updated On :18 ஏப்ரல் 2018, 9:27 am IST

காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோயாளிகளுக்கான ஊன தடுப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் இ. அருள்மணி நாகராஜன் தலைமை வகித்தார். துணை இயக்குநர் (தொழுநோய்) சாமியப்பன் தொழுநோயாளிகளுக்கு ஊன தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்துகள் வழங்கிப் பேசினார். 
முகாமில், தொழுநோயாளிகளுக்கு மூக்கு கண்ணாடி, காலணிகள், போர்வைகள், ரண சிகிச்சைக்கான மருத்துவ பெட்டகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. 
மேலும் டாமியன் பவுண்டேசன் சார்பில் கால் புண்கள் பராமரிப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் அனைத்து தொழுநோயாளிகளுக்கும் உணவு வழங்கப்பட்டது. மருத்துவ அலுவலர்கள், நலக்கல்வியாளர்கள், மருத்துவம் அல்லா மேற்பார்வையாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.