புதுக்கோட்டையில் பிரபல வயி.சண்முகம்பிள்ளை ஜுவல்லர்ஸில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை கீழ ராஜவீதியில் 77 ஆண்டு கால பாரம்பரியமிக்க வயி.சண்முகம்பிள்ளை ஜுவல்லர்ஸ் நிறுவனம் உள்ளது. இந்தக் கடையின் அருகில் தங்கம், வைரம், ஆன்டிக் ஆகிய நகைகளுக்கென தனி பிரிவுகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டடத்தின் பிரமாண்டத் திறப்பு விழா ஏப். 4 ஆம் தேதி நடைபெற்றது. விழாவில், திரைப்பட நடிகை மஞ்சிமா மோகன் பங்கேற்றார்.
விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய கடையில் தற்போது அட்சய திருதியை சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இதில், ஏராளமான மக்கள் அட்சய திருதியை நாளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, முன்கூட்டியே தங்க நகைகளைத் தேர்வு செய்து வருகின்றனர். மேலும், தங்கத்திற்கு குறைந்த சேதாரம், வைரத்திற்கு 10% சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்கத்திற்கு நிகரான வெள்ளி இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், திருமணங்களுக்கு மொத்தமாக நகை வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகையோடு, பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன. மேலும், வைரம் மற்றும் ஆண்டிக் நகைக்களுக்கான கண்காட்சியும் நடைபெற்றுவருகிறது. "வர வர ராசியாகும், வாங்க வாங்க தங்கம் சேரும்' என வயி.சண்முகம்பிள்ளை ஜுவல்லர்ஸின் தாரக மந்திரத்திற்கு இணங்க, அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி மக்கள் பயன்பெறுமாறு கடையின் உரிமையாளர் வெங்கடாசலம், நிர்வாக இயக்குநர் ராகுல் வெங்கடாசலம் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








