புதுக்கோட்டை தையல் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடாக பதவிகளை பெற முயற்சி நடைபெறுவதாக கூறி, வேட்பாளர்கள் புதன்கிழமை அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கத்தின் 7 இயக்குநர் பதவிகளுக்காக அதிமுக சார்பில் 7 பேரும், திமுக சார்பில் 7, சிஐடியு சார்பில் 1 என 15 பேர் வேட்புமனு செய்துள்ளனர்.
ஆனால், அதிமுகவினர் அதிகாரிகளின் துணையோடு, முறைகேடாக பதவிகளை பெற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டும் உரிய பதில் இல்லையாம். இதனால், புதுக்கோட்டை தையல் கூட்டுறவு சங்க அலுவலகம் அருகே சிஐடியுவின் மாவட்டத் தலைவர் செல்வராஜ், பொதுச்செயலாளர் முகமது அலிஜின்னா, திமுக நிர்வாகி எம்.எம்.பாலு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் முதல் பாடல்!

வீட்டின் பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் பங்கு! அறிவது அவசியம்

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

