புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே லெக்கணாப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராமையா. இவரது மனைவி முத்துமாரி(27). 5 ஆண்டுக்கு முன்பு திருமணமான இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
முத்துமாரிக்கும், அருகே வசித்து வரும் உறவினர் குடும்பத்தினருக்கிடையே தகராறு இருந்து வந்ததாம். இந்த நிலையில், சனிக்கிழமை முத்துமாரியிடம், உறவினர்களான சிவக்குமார்(37), அவரது மனைவி முத்துலட்சுமி(27), அடைக்கலம்(27), அவரது மனைவி பூங்கோதை(26) ஆகியோருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்ட முத்துமாரி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துமாரி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
இதுகுறித்து அன்னவாசல் காவல் ஆய்வாளர் சுமதி வழக்குப் பதிவு செய்து சிவக்குமார், அடைக்கலம், முத்துலட்சுமி, பூங்கோதை ஆகியோரைக் கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?

விதிமீறல்! விஜய் மீது வழக்குப் பதிவு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

