மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

இளம்பெண் சாவு: இரு பெண் உள்பட  4 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே லெக்கணாப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராமையா. இவரது மனைவி முத்துமாரி(27).

Updated On :21 மே 2018, 1:50 am

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே லெக்கணாப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராமையா. இவரது மனைவி முத்துமாரி(27). 5 ஆண்டுக்கு முன்பு திருமணமான இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
முத்துமாரிக்கும், அருகே வசித்து வரும் உறவினர் குடும்பத்தினருக்கிடையே தகராறு இருந்து வந்ததாம். இந்த நிலையில், சனிக்கிழமை முத்துமாரியிடம், உறவினர்களான சிவக்குமார்(37), அவரது மனைவி முத்துலட்சுமி(27), அடைக்கலம்(27), அவரது மனைவி பூங்கோதை(26) ஆகியோருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 இதில் ஆத்திரமடைந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்ட முத்துமாரி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  சிகிச்சை பலனின்றி முத்துமாரி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
இதுகுறித்து அன்னவாசல் காவல் ஆய்வாளர் சுமதி வழக்குப் பதிவு செய்து சிவக்குமார், அடைக்கலம், முத்துலட்சுமி, பூங்கோதை ஆகியோரைக் கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.