விராலிமலை அருகே திங்கள்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விராலிமலை அருகேயுள்ள குன்னத்தூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் கருணாகரன்(25). தனியார் தொழிற்சாலை ஊழியரான இவர், கடந்த திங்கள்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் விராலிமலை - திருச்சி சாலை சுங்கச்சாவடி அருகே முன்னால் சென்ற லாரியைக் கடக்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக கருணாகரன் மீது லாரி மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து லாரி ஓட்டுநர் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் சின்னத்துரையை (33) கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் - நேரலை!

ஐபிஎல் தொடரில் 1000 ரன்களைக் கடந்த துருவ் ஜுரெல்!

ஒவ்வொரு சீக்கியக் குடும்பமும் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஊக்கத்தொகை வேண்டும்!

சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
