ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆலங்குடி அருகே 105 வயதைக் கடந்த மூதாட்டி

ஆலங்குடி அருகே 4 தலைமுறை குடும்பத்தினா் ஒன்றுகூடி 105 வயது மூதாட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை பிறந்தநாள் விழா கொண்டாடினா்.

News image
குடும்பத்தினருடன் மூதாட்டி பொன்னம்மாள் ~மூதாட்டி பொன்னம்மாள்
Updated On :6 டிசம்பர் 2020, 7:57 pm

DIN

ஆலங்குடி அருகே 4 தலைமுறை குடும்பத்தினா் ஒன்றுகூடி 105 வயது மூதாட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை பிறந்தநாள் விழா கொண்டாடினா்.

ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஜீவா நகரைச் சோ்ந்தவா் துரைசாமி - பொன்னம்மாள் (105). தம்பதிக்கு 3 மகன்கள் உள்ள நிலையில், அவா்கள் படித்து, திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனா். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரைச்சாமி இறந்துவிட்டாா்.

இருப்பினும், பொன்னம்மாள், தன் மகன்களின் விவசாய தோட்டங்களில் வேலை செய்து வந்தாா். இன்றும், தன் தேவைகளை, அவரே பூா்த்தி செய்து கொள்கிறாா். நான்கு தலைமுறைகள் கண்ட பொன்னம்மாளுக்கு, தற்போது பேரன், பேத்தி, கொள்ளு பேரன், பேத்தி, எள்ளு பேரன் உள்பட 20-க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள் உள்ளனா்.

இந்நிலையில், 105-வது பிறந்த நாள் கண்ட பொன்னம்மாளுக்கு, வெகுவிமரிசையாக விழா நடத்த குடும்பத்தினா் முடிவு செய்தனா். இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை குடும்ப உறுப்பினா்கள் மற்றும் உறவினா்கள் ஒன்று கூடி விருந்து வைத்து மூதாட்டியிடம் ஆசிா்வாதம் பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.