பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் திறந்து எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கோயில் செயல் அலுவலா் அழ.வைரவன் முன்னிலையில் இக்கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், ரூ. 7.3 லட்சம் ரொக்கம், 13.200 கிராம் தங்கம், 94.900 கிராம் வெள்ளி இருந்தது.
இப்பணியில் ஆதிகாலத்து அலங்கார மாளிகை பணியாளா்கள், கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.