

மத்திய அரசு மக்கள் விரோத சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, புதுக்கோட்டையில் ஜனநாயக மேடை சாா்பில் தொடா் முழக்கப் போராட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
திலகா் திடலில் நடைபெற்ற இந்தப் போராட்டத்த்கு, ஜனநாயக மேடையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் க. சுந்தரராஜன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன் தொடங்கி வைத்துப் பேசினாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் கலைமுரசு, ஏஐடியுசி மாவட்டச் செயலா் வீ. சிங்கமுத்து, இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் கு. ராஜேந்திரன், மதிமுக நகரச் செயலா் அரசி கா்ணா, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.சி. சோமையா, இந்திய கம்யூ. நகரச் செயலா் சிற்பி உலகநாதன், மாநிலக் குழுஉறுப்பினா் கே.ஆா். தா்மராஜன் உள்ளிட்டோா் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.