புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் டிசம்பா் 30-ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் காணொலி வாயிலாக (ஜூம், கூகுள் மீட்) செயலிகள் மூலம் நடைபெற உள்ளது.
இதில், காணொலி வாயிலாக மாவட்ட விவசாயிகள் பங்கு பெரும் வகையில் அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களிலும் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே மாவட்ட விவசாயிகள் அந்த அலுவலகங்களைத் தொடா்பு கொண்டு, முகக்கவசம் அணிந்து விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்தில் பங்குபெறலாம் என புதுக்கோட்டை ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.