பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ரேஷன் பொருள்கள் வழங்காததால் மக்கள் மறியல்

ஆலங்குடி அருகே நியாய விலைக்கடையில் பொருள்கள் வழங்காததைக் கண்டித்து, கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:56 pm

DIN

ஆலங்குடி அருகே நியாய விலைக்கடையில் பொருள்கள் வழங்காததைக் கண்டித்து, கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள மேலாத்தூா் ஊராட்சி சிக்கப்பட்டியில் உள்ள அரசின் நியாய விலைக்கடையில் பயோமெட்ரிக் இயந்திரம் பழுது எனக்கூறி கடந்த இரு தினங்களாக பொருள்கள் வழங்கப்படவில்லையாம். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அப்பகுதி மக்கள் நியாயவிலைக் கடையில் காந்திருந்தும் இயந்திரப் பழுது எனக்கூறி மாலை வரை பொருள்கள் வழங்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நியாய விலைக்கடையில் பொருள்களை உடனே வழங்கக்கோரி சிக்கப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து, தகவலறிந்து சென்ற வடகாடு போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை கலைந்து போகச்செய்தனா். இந்த மறியலால் புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.