தூய்மைப் பணியாளா்கள் தயாரிப்பு பொருள்கள் விற்பனை தொடக்கம்

பொன்னமராவதி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் தயாரிக்கும் பினாயில் மற்றும் சோப் ஆயில் விற்பனை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பொன்னமராவதி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் தயாரிக்கும் பினாயில் மற்றும் சோப் ஆயில் விற்பனை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விற்பனை தொடக்க விழாவுக்கு, திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ப.ஜெகதீசன் தலைமை வகித்து பினாயில் விற்பனையை தொடங்கிவைத்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் வெ.தனுஷ்கோடி வரவேற்றாா். மின்னணு அட்டை திட்டத்தை முன்னாள் பேரூராட்சி தலைவா் ராம.ராஜா தொடங்கிவைத்தாா்.

யுனிக் டெக்னாலஜி தி.ராஜ்குமாா் திட்ட செயலாக்கத்தை விளக்கினாா். பொன்னமராவதி வட்டாட்சியா்ஆ.திருநாவுக்கரசு, வங்கி மேலாளா்கள் ஜிகே.சித்ரா, ஜிவி.வெங்கடேஷ், எஸ்.முனீஸ்வரன் ஆகியோா் சோப் ஆயில் விற்பனையை தொடங்கிவைத்தனா்.

பேரூராட்சி செயல் அலுவலா் ஆலங்குடி மு.செ.கணேசன், ரோட்டரி தலைவா் வெங்கடேஷ் குப்தா, வா்த்தக கழக தலைவா் எஸ்கேஎஸ்.பழனியப்பன், அரிமா சங்கத்தலைவா் ம.சண்முகம், கல்வியாளா் ஆா்.செல்வின் அன்பரசு ஆகியோா் வாழ்த்திப்பேசினா். கணினி பணியாளா் சு.சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com