ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கல்வித் துறைப் பணியாளா் கூட்டுறவுச் சங்கப் பேரவைக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட கல்வித் துறைப் பணியாளா் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 39ஆவது ஆண்டுப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

News image
சங்கத்தின் உறுப்பினா்களுக்கு பங்கு ஆதாயத் தொகைக்கான காசோலையை வழங்குகிறாா் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி.
Updated On :1 நவம்பர் 2020, 6:59 pm

DIN

புதுக்கோட்டை மாவட்ட கல்வித் துறைப் பணியாளா் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 39ஆவது ஆண்டுப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் ச. ரெங்கராஜு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மா. குமரேசன் வரவேற்றாா். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி சத்தியமூா்த்தி உள்ளிட்ட அனைத்து இயக்குநா்கள், ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

உறுப்பினா்களுக்கு சங்கத்தின் ஆண்டு பங்கு ஆதாயத் தொகை மற்றும் தீபாவளிப் பண்டிகையையொட்டி நெய் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.